விவசாயிகள் மீது மானாவாரிய பாசம் வைத்துள்ள மோடி! கட்டிப் பிடிச்சு கண்ணீர்விட்டு கதறியழுத சம்பவம்..!

By Vishnu PriyaFirst Published Jan 6, 2019, 3:15 PM IST
Highlights

விவசாயிகளை நாங்கள் உணவளிப்பவர்களாக பார்க்கிறோம். ஆனால் காங்கிரஸ் அரசோ  வெறும் ஓட்டு வங்கியாகவே அவரக்ளை கருதியது!: மோடி. (ஆமா தல! கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நீங்க ஒவ்வொரு வீடா தேடி வந்து, கட்டிப்பிடிச்சு கண்ணீர்விட்டு கதறியழுது, கை நிறைய நிவாரணப் பணத்தை அள்ளியள்ளி கொடுத்ததை பார்த்தப்பவே எங்களுக்குப் புரிஞ்சு போச்சு. அதை, உங்க வாயால வேற விளக்கணுமாய்யா?)

* விவசாயிகளை நாங்கள் உணவளிப்பவர்களாக பார்க்கிறோம். ஆனால் காங்கிரஸ் அரசோ  வெறும் ஓட்டு வங்கியாகவே அவரக்ளை கருதியது!: மோடி.
(ஆமா தல! கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நீங்க ஒவ்வொரு வீடா தேடி வந்து, கட்டிப்பிடிச்சு கண்ணீர்விட்டு கதறியழுது, கை நிறைய நிவாரணப் பணத்தை அள்ளியள்ளி கொடுத்ததை பார்த்தப்பவே எங்களுக்குப் புரிஞ்சு போச்சு. அதை, உங்க வாயால வேற விளக்கணுமாய்யா?)

* சபரிமலை சன்னிதானத்தினுள் செல்ல போலீஸ் எங்களைப் பயன்படுத்தவில்லை. நாங்கள்தான் போலீஸை பயன்படுத்தினோம். நான் இதற்கு முன்பே சில மாவோயிஸ்ட் ஆதரவு இயக்கங்களில் செயல்பட்டு வந்துள்ளேன்!: பிந்து (க்கும்! இனி யாராச்சும் சொல்லுவீங்க, ‘வெறும் விளம்பரத்துக்குத்தான் அந்த ரெண்டு பொம்பளைங்களும் சாமி கும்பிட போனாங்க!’ அப்படின்னு. எவ்வளவு பெரிய பக்தாள் பாருங்க ரெண்டு பேரும்.)

* மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பனிரெண்டு தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கினால்தான் கூட்டணி! என்று காங்கிரஸை குமாரசாமி நிர்பந்தித்துள்ளார்: செய்தி. (அதெல்லாம் இருக்கட்டும். தல, நீங்க நின்னுட்டு இருக்கிற முதலமைச்சர் நாற்காலியே அவங்க முட்டுக் கொடுத்து இருக்கிறதாலேதான் ஆடாம இருக்குதுங்கிறது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா! இதான் டவுட்டு. )

* தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், தொழிலதிபர் விஜய் மல்லையாவை மும்பை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது: செய்தி. 
(ஆஹா, என்ன ஒரு அதிரடி ஆக்‌ஷன்! மல்லையா முந்தா நாள்தான் இந்தியாவுல இருந்து தப்பிச்சு ஓடினா, நேத்து காலையிலதான் மோடியோட அரசாங்கம் அமைஞ்சுது, நேத்து மத்தியானமே இப்படியொரு தீர்ப்பு வந்துடுச்சே! மோடி அரசு, மேஜிக் அரசுதான் போங்கோ!)

* அ.தி.மு.க.வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லையே! தாமதமாகிறதே! என்று கேட்கிறார்கள். அந்த கடசியின் வேட்பாளரை நாங்கள் அறிவிக்க முடியாது. அவர்கள்தான் அறிவிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின். (இந்த சிங்கார சென்னையிலேயே , இவ்வளவு ஏன் இந்த வேர்ல்டுலேயே இப்படியொரு பதிலை எந்த தலைவனாலேயும் சொல்ல முடியாது! இந்த பதிலை கல்வெட்டா வெட்டி, தஞ்சாவூர் கோயில்ல வைக்கணும் தளபதி. பின்னால் வரும் இளைஞர்களுக்கு இது அரசியல் அறிவை நெய் ஊத்தி வளர்க்குமுங்கோவ்!)

click me!