50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய கேரள கம்யூனிஸ்ட் தலைவர்

Published : May 30, 2023, 01:17 PM IST
50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய கேரள கம்யூனிஸ்ட் தலைவர்

சுருக்கம்

50 லட்சம் மினி கூப்பர் காரை வாங்கியதாக கேரள கம்யூனிஸ்ட் தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

50 லட்சம் மதிப்பிலான மினி கூப்பர் காரை வாங்கியதற்காக கேரளா கம்யூனிஸ்ட் தலைவர் பி.கே அனில் குமார் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அனில் குமார் காரை டெலிவரி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, சிபிஐ-எம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

50 லட்சம் மதிப்பிலான மினி கூப்பர் காரை வாங்கியதற்காக பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தொழிலாளர் சங்கத்தின் கேரள மாநில பொதுச் செயலாளர் பி.கே அனில் குமார் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இந்த சங்கம் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (சிஐடியு) இணைக்கப்பட்டுள்ளது.

அனில் குமார் காரை டெலிவரி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (ஓஐஎல்) ஊழியராக இருக்கும் தனது மனைவி வாகனத்தை வாங்கியதாக சிஐடியு தலைவர் கூறினார். இந்த மினி கூப்பரைத் தவிர, ஒரு டொயோட்டா க்ரெஸ்டா லிமிடெட் எடிஷன், டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற வாகனங்கள் அவரிடம் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

அவரது வீடு கொச்சி பனமப்ளி நகர் பகுதியில் 4000 சதுர அடியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் எர்ணாகுளம் சிபிஎம் கட்சியின் செயலாளர் சி.என் மோகன் மற்றும் பிற சிபிஎம் தலைவர்களுடன் வசூல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. அனில் குமார் முன்பு கொச்சியில் உள்ள வைபீன், குழுப்பில்லியில் உள்ள ஒரு கேஸ் ஏஜென்சியின் உரிமையாளருக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

இதையும் படிங்க..பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம், மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு எப்போது தெரியுமா? முழு விபரம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!