211 % சொத்துகுவிப்பு - சசிகலாவின் பேராசை!! நீதிபதிகள் பகீர் தீர்ப்பு!!!

 
Published : Feb 14, 2017, 07:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
211 % சொத்துகுவிப்பு - சசிகலாவின் பேராசை!! நீதிபதிகள் பகீர் தீர்ப்பு!!!

சுருக்கம்

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேருக்கும்  4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும்  விதிக்கப்பட்டது. 

இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் எனவும் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் சசிகலா 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

வருமானத்திற்கு அதிகமாக 30 % மட்டுமே சொத்துக்கள் இருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் வருமானத்துக்கு அதிகமாக 211% அளவுக்கு இவர்கள் மூவரும் சொத்து குவித்திருகிறார்கள்.

இவர்கள் குற்றவாளிகள் என்பதற்கு இந்த ஆதாரம் ஒன்றே போதும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

அதனால் 4 ஆண்டு சிறைத் தண்டைனையில் எஞ்சியுள்ள தண்டனையை இவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும், பெங்களூரு நீதிமன்றத்தில் அறைஎண் 48-ல் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் இவர்கள் 3 பேரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்துள்ளதால் சசிகலாவின் ஆட்சி கனவு கானல் நீர் போல் தகர்ந்து போய் உள்ளது. 

சசிகலா, கட்சி தலைமையில் மட்டும் இருந்திருக்கலாம் எனவும் தற்போது 'பேராசை பெரு நஷ்டம்' என்ற உண்மை நிலைத்து விட்டதாகவும் அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!