சென்னை வந்தார் மோடி - அஞ்சலி செலுத்த விரைவு

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 12:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
சென்னை வந்தார் மோடி - அஞ்சலி செலுத்த விரைவு

சுருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில¢ உள்ளராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை சென்னைக்கு கிளம்பினார்.

டெல்லியில் கடும் பனிமூட்டமாக இருப்பதால் சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மோடி கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. மோடி 12 மணியளவில் சென்னையை வந்தடைந்தார். நண்பகல் 12.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

PREV
click me!

Recommended Stories

பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி
சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இல்லீகல் 'கிஃப்ட்'..! இந்தியாவிற்கு புண்ணாக மாறிய வஞ்சகம்..!