ராணுவம் குவிப்பால் உச்சக்கட்ட பதற்றம்... காஷ்மீர் விரைகிறார் அஜித் தோவல்..!

By vinoth kumarFirst Published Aug 6, 2019, 10:53 AM IST
Highlights

உத்தரப் பிரதேசம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதலாக 8000 துணை ராணுவப் படையினரை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சுமார் 60 ஆயிரம் வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக மேலும் பல ஆயிரம் வீரர்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை அடுத்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜம்மு-காஷ்மீர் விரைந்துள்ளார்.\

 

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும், மாநில அந்தஸ்தை இழந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால், ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.  

இந்நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்கள், டிஜிபிக்கள், பாதுகாப்பு படை மற்றும் காவல்துறை ஆணையர்கள் தயார் நிலையில் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களும் சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் வன்முறை, மதக்கலவரம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அனைத்து மாநிலங்களிலும் உஷார் நிலையை அமல்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதலாக 8000 துணை ராணுவப் படையினரை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சுமார் 60 ஆயிரம் வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக மேலும் பல ஆயிரம் வீரர்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 

click me!