Jaipur Tailor Murder: கொலையாளிகள் இப்படித்தான் தப்பிச் சென்றனர்!!

Published : Jun 29, 2022, 03:43 PM IST
Jaipur Tailor Murder: கொலையாளிகள் இப்படித்தான் தப்பிச் சென்றனர்!!

சுருக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று டெய்லர் கண்ணையா லாலை கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற கொலையாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட இருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இருவரும் பைக்கில் ஹெல்மெட் அணிந்து தப்பிச் செல்லும்போது சிக்கினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்றுக்காலை கண்ணையா லால் (வயது 48) என்ற டெய்லர் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முகம்மது நபியை பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய விமர்சித்தார் என்று கூறப்பட்டது. இதையடுத்து எழுந்த கண்டன குரல்களால் அவர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கண்ணையா லால் குரல் கொடுத்து இருந்தார். இதையடுத்து கண்ணையாவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டு இருந்தன.

 

இந்த நிலையில்தான் நேற்று இவரது கடைக்கு சட்டை தைக்க அளவு கொடுக்க வந்தது போல் இருவர் வந்தனர். அதில், அளவு கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே திடீரென கண்ணையாவை ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார், பின்னர் தலையை துண்டித்தார். இதையடுத்து அந்த இடத்தில் இருந்து கொலையாளிகள் இருவரும் தப்பிச் சென்றனர்.

கொலையாளிகளை பிடிக்க மாநில அரசு தனிப்படை அமைத்து தேடியது. அப்போது, பைக்கில் கொலை குற்றம்சாட்டப்பட்ட இருவர் ஹெல்மெட் அணிந்தவாறு தப்பிச் சென்றது தெரிய வந்தது. ஜெய்ப்பூருக்கு வெளியே நெடுஞ்சாலையில் தப்பிச் சென்றபோது இருவரும் பிடிபட்டனர் என்று ராஜ்சமந்த்தைச் சேர்ந்த தலைமை போலீஸ் அதிகாரி சுதிர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட கோஸ் முகமது, ரியாஸ் அக்தாரி இருவரும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்தனர். கீழே விழுந்து புரண்ட அவர்களை போலீசார் திறமையுடன் பிடித்து கைது செய்தனர். 

கொலை செய்யப்பட்ட கண்ணையா லாலுவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கொடூர மரணத்தை அடுத்து, இவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கி, ரூ. 31 லட்சத்தை இழப்பீடாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!
மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!