விண்ணில் பாய்ந்த எஸ்எஸ்எல்வி டி-3.. இஸ்ரோ சாதனை படைக்குமா?

Published : Aug 16, 2024, 09:21 AM IST
விண்ணில் பாய்ந்த எஸ்எஸ்எல்வி டி-3.. இஸ்ரோ சாதனை படைக்குமா?

சுருக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இன்று ஆகஸ்ட் 16 ஆம் தேதி சிறிய செயற்கைக்கோள் ஏவுகணையான SSLV-D3-ஐ தற்போது ஏவியுள்ளது. இந்த ராக்கெட் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து சென்று பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 16) வெள்ளிக்கிழமை காலை 9:17 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிறிய செயற்கைக்கோள் ஏவுகணையின் (SSLV) மூன்றாவது மேம்பாட்டு விமானத்தை ஏவ உள்ளது.

எஸ்எஸ்எல்வி டி-3 (SSLV-D3/EOS-08) திட்டத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரோ அதன் சிறிய செயற்கைக்கோள் ஏவுதளத்தை சோதனை செய்து, சமீபத்திய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைக்க உள்ளது. இந்த ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து சென்று பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் (பூமிக்கு மேல் 500 கிமீ வரை) நிலைநிறுத்த முடியும்.

இந்த சாதனையானது, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் ஆதரவுடன், இந்திய தொழில்துறைகள் இந்த ராக்கெட்டை எதிர்கால பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கும். இன்னும் சற்று நேரத்தில் செயற்கைகோள் ஏவப்பட்ட உள்ளது. இந்த மிஷன் வெற்றி பெற்றால் இது உலக அளவில் இந்தியாவிற்கு மேலும் அந்தஸ்து கிடைக்கும் என்று கூறலாம்.

PREV
click me!

Recommended Stories

நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!
Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி