ஆக்சியம்-4 சாமானியர்களின் பயணம்! விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவின் நெகிழ்ச்சி

Published : Aug 21, 2025, 03:09 PM IST
Shubhanshu Shukla

சுருக்கம்

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று வந்த சுபான்ஷு சுக்லா, தனது விண்வெளிப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மிஷன் பைலட் பணியில் ஈடுபட்ட அவர், இந்தியாவின் விண்வெளித் திட்டங்களின் வளர்ச்சியைப் பாராட்டினார்.

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று வந்த இந்தியாவின் முதல் விண்வெளி வீரர், குழுத் தலைவர் சுபான்ஷு சுக்லா, தனது பயணம் ஒட்டுமொத்த தேசத்துக்கு சொந்தமானது என்று வர்ணித்தார். இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் உடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுபான்ஷு சுக்லா, விண்வெளிப் பயணம் முற்றிலும் மாறுபட்டது என்றார். இந்தத் திட்டத்தை சாத்தியமாக்கிய இந்திய அரசு, இஸ்ரோ மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சுக்லா செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் உரியது. இந்த அனுபவம் தரையில் கற்றுக்கொண்டதிலிருந்து மிகவும் மாறுபட்டது. இது ஒரு நம்பமுடியாத அனுபவம்" என்று கூறினார். மேலும், "இந்திய அரசு, இஸ்ரோ, ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்றும் தெரிவித்தார்.

மிஷன் பைலட் பணி

விண்வெளிப் பயணத்தில் தனது அனுபவத்தையும், விரிவான பயிற்சியையும் விவரித்த சுபான்ஷு, "இந்த திட்டத்தில் எனது பணி மிஷன் பைலட் பணி. க்ரூ டிராகன் விண்கலத்தில் நான்கு இருக்கைகள் உள்ளன. நான் மிஷன் பைலட்டாக இருந்ததால், காமண்டருடன் இணைந்து பணியாற்றி, க்ரூ டிராகன் விண்கல அமைப்புகளுடன் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய சோதனைகளைச் செய்தோம். அத்துடன் STEM விளக்கங்களை நிகழ்த்தவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கவும் வேண்டியிருந்தது" என்று குறிப்பிட்டார்.

"மக்களின் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். விண்வெளியில் முதல் சில நாட்கள் கடினமாக இருந்தன. ஈர்ப்பு விசைக்கு பழகுவது ஒரு சவாலாக இருந்தது. விரைவில், நம் மண்ணிலிருந்து, நம் ராக்கெட்டிலிருந்து, நம்முடைய விண்கலத்திலிருந்து விண்வெளிக்குப் பயணிப்பதை நாம் காண்போம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் பாராட்டு

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் பேசுகையில், இஸ்ரோ 2005-2015 காலப்பகுதியில் ஏவிய விண்கலங்களை விட, கிட்டத்தட்ட இரு மடங்கு விண்கலங்களை 2015-2025 காலப்பகுதியில் ஏவியுள்ளது என்று தெரிவித்தார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று திரும்பி வந்த முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவையும் இஸ்ரோ தலைவர் பாராட்டினார்.

நாராயணன் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் இஸ்ரோவின் முன்னேற்றம் அபரிமிதமானது. அசுர வேகத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.” என்றார். “கடந்த ஆறு மாதங்களில், மூன்று முக்கியமான திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஆக்சியம் 4 திட்டம் மிகவும் மதிப்புமிக்க திட்டம். அது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Expensive Egg: ஒரே ஒரு முட்டை விலை ரூ.25,000..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
LPG Scam Alert: Indane & HP Gas Alert: ஆன்லைன் கேஸ் புக்கிங்கில் நடக்கும் நூதன மோசடிகள்..!