கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை... கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு பெயர் சூட்டல்..!

By Thiraviaraj RMFirst Published Jul 4, 2020, 10:27 AM IST
Highlights

சீன- இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றி கவுரவிக்கும் வகையில் டெல்லி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு அவர்களது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 

சீன- இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றி கவுரவிக்கும் வகையில் டெல்லி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு அவர்களது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி இந்தியா-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். அவர்களின் தியாகத்தை போற்ற்யும் வகையில், டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முடிவு செய்துள்ளது.
 
டெல்லி சத்தர்பூர் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனையில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமார் ஆயிரம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஐசியு மற்றும் வென்டிலேட்டர் வார்டுக்கு, கல்வான் மோதலில் உயிரிழந்த கமாண்டர் சந்தோஷ் பாபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற வார்டுகளுக்கும், உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

click me!