அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்... 13 பேர் உயிரிழப்பு!

Published : Nov 05, 2018, 09:21 AM IST
அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்... 13 பேர் உயிரிழப்பு!

சுருக்கம்

அரியானாவில் திசை மாறி வந்த லாரி கார், பைக்கில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரியானாவில் திசை மாறி வந்த லாரி கார், பைக்கில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா-பானிபட் நெடுஞ்சாலை வழியாக இன்று மாலை சுமார் 6 மணியளவில் வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக திசை மாறி வந்து கார் மற்றும் ஜீப்பின் மீது பயங்கரமாக மோதியது.  

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் படுகாயமடைந்த 8 பேரை மீட்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்