ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதல்... உடல் சிதறி உயிரிழந்த 7 பேர்..!

Published : Jul 15, 2019, 05:54 PM IST
ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதல்... உடல் சிதறி உயிரிழந்த 7 பேர்..!

சுருக்கம்

குஜராத்தில் ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

குஜராத்தில் ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர். 

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மன்குவா பகுதியில் ஒரு ஆட்டோவில் 15-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் வேகமாக வந்த லாரி ஆட்டோவில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ரிக்‌ஷா அப்பளம் போல் நொறுங்கியது.

 

இந்த விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10  பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 7 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!