
வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை சமையலறையில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அவரது பாட்டி வளர்த்து வந்தார். விபத்து ஒன்றில் அந்த சிறுமி தனது பெற்றோரை இழந்துள்ளார். இதனை அடுத்து, பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த சிறுமியை, சுரேந்தர் என்பவருக்கு ரூ.4000-க்கு விற்றுள்ளார். அந்த சிறுமியை, சுரேந்தர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் உள்ள ஒரு தம்பதியிடம், வீட்டு வேலை செய்வதற்காக சிறுமியை அனுப்பி வைத்துள்ளார் சுரேந்தர்.
அங்கு இரண்டு ஆண்டுகள் வீட்டு வேலை செய்து வந்த சிறுமி, எந்த வித துன்புறுத்தல் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனது நண்பர் மிஷ்ராவின் வீட்டுக்கு சிறுமியை வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சிறுமியும் டெல்லி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த, 30 ஆயிரம் ரூபாயை மிஷ்ரா வலுக்கட்டாயமாக பறித்துள்ளார். மேலும் தனது வீட்டில் மனைவி, குழந்தைகள் இருக்கும்போதே சமையலறையில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி தடுத்தாலோ, சத்தம் போட்டாலோ கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். அது மட்டுமல்லாது சிறுமியை கட்டிப்போட்டும் பலாத்காரம் செய்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் மிஷ்ரா மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.
மிஸ்ராவின் பிடியில் இருந்து தப்பித்த அந்த சிறுமி, அங்குள்ள இரண்டு இளைஞர்களிடம் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எடுத்து சொல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது. போலீசாரால் மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.