உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி, இந்தியர்களுக்கு பிரான்ஸ் அதிபர் குடியரசு தின வாழ்த்து!

Published : Jan 26, 2024, 12:20 PM IST
உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி, இந்தியர்களுக்கு பிரான்ஸ் அதிபர் குடியரசு தின வாழ்த்து!

சுருக்கம்

நாட்டின் 75ஆவது குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இந்தியா வந்த பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி நண்பரே என்று பிரதமர் மோடிக்கும், இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் 75ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக தனி விமானம் மூலமாக ஜெய்பூர் வந்த அவர் அங்கு நடந்த கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இம்மானுவேல் -அன்பு நண்பரே உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி, பிரதமர் மோடி, இந்தியர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக பிரான்ஸ் நாட்டில் 30,000 மாணவர்களை படிக்க அனுமதிக்கப்படுவதாக கூறினார். இது குறித்து மேலும், அவர் கூறியிருப்பதாவது: இன்னும் 6 ஆண்டுக்குள்ளாக பிரான்ஸ் நாட்டில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். இந்தியா மற்றும் பிரான்ஸ் இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில் 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்திய மாணவர்கள் பிரான்ஸ் படிக்க அனுமதிக்கப்படுவது எனது லட்சிய இலக்கு. இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார்.

இந்திய மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி தெரியாதவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனுமதிக்க சர்வதேச வகுப்புகள் நடத்தப்படும். எங்களது நாட்டில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு விசா செயல்முறையை எளிமைப்படுத்துவோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!