முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாசிட்டிவ்..!

Published : Apr 19, 2021, 06:51 PM ISTUpdated : Apr 19, 2021, 06:52 PM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாசிட்டிவ்..!

சுருக்கம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக உள்ளது. தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகிவருகிறது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 10,941 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மன்மோகன் சிங் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா 2ம் அலையில் தொற்று அதிவேகமாக பரவிவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடிக்கு ஆலோசனை தெரிவித்து மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்த நிலையில், அவருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Republic Day 2026 : இந்த 5 உரிமைகள் தெரிஞ்சா யாரும் உங்களை ஏமாத்த முடியாது
இந்தியா குடியரசாக மாற 2 வருடம் ஏன் எடுத்தது? குடியரசு தினத்தின் உண்மை கதை