வரலாறு காணாத வேலை வாய்ப்பின்மை !! 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் அதிர்ச்சி !!

By Selvanayagam PFirst Published Sep 5, 2019, 11:32 PM IST
Highlights

இந்தியாவில்  வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக உயர்ந்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார நிலைமை மந்தமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 5 சதவீதமாக குறைந்து இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாட்டின் வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு மாதத்தில் இதன் விகிதம் 8.4 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது நகர்புறங்களில் 9.6 சதவீதமும், கிராமப்புறங்களில் 7.8 சதவீதமும் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 2016-ல் எடுக்கப்பட்ட ஆய்வை ஒப்பிடும்போது, 2 சதவீதம் வரை வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த  2014 தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி இருந்தார். ஆனால், இப்போதைய ஆய்வு அறிக்கையின்படி பார்த்தால் இருக்கிற வேலையும் பறிபோய் இருப்பதை காட்டுகிறது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழச்சிதான் வேலை வாய்ப்பின்மைக்கு முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
2017-18-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தொழிலாளர்கள் சக்தி தொடர்பான ஆய்வு அறிக்கையில் வேலைவாய்ப்பின்மை 6.1 ஆக இருந்தது. சர்வதேச அளவில் பல நாடுகளில்கூட 6.1 சதவீதம் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. அது, இயற்கையானதுதான்.

ஆனால், இப்போது கடந்த ஆய்வை ஒப்பிடும்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருப்பது பிரச்சினைக்குரியது. இந்தியாவில் அதிக தொழிலாளர் சக்தி உள்ளது. ஆனாலும், உற்பத்தி திறன் குறைவாக உள்ளது. குறைந்த சம்பளம் தான் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும் போதிய அளவுக்கு இல்லை. அதை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ள

click me!