மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் தேதி அறிவிப்பு – வேட்புமனு தாக்கல், ரிசல்ட் – முழு விவரம்!

Published : Oct 15, 2024, 04:42 PM ISTUpdated : Oct 15, 2024, 04:46 PM IST
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் தேதி அறிவிப்பு – வேட்புமனு தாக்கல், ரிசல்ட் – முழு விவரம்!

சுருக்கம்

Maharashtra, Jharkhand Election 2024 Dates:மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்களுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், சரிபார்ப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Maharashtra, Jharkhand Election 2024 Dates: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்தது. அதன்படி மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ஆம் தேதியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம அறிவித்துள்ளது. இங்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

ஹரியானா காங்கிரஸ் தோல்விக்கு ஹூடா தான் காரணம்! அவர் முட்டாள்! குர்னாம் சிங் விமர்சனம்!

மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், இது குறித்து வரும் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அரசிதழில் அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வேட்பு மனு தாக்கல் செய்ய இந்த மாதம் 29 ஆம் தேதி கடைசி நாள் என்றும், 30ஆம் தேதி வேட்புமனு சரிபார்ப்பு நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வேட்புமனுவை திரும்ப பெற நவம்பர் 4ஆம் தேதி வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநில தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணி 23 ஆம் தேதி தொடங்கி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். இதே போன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் முதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 25 ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தலுக்கு 29ஆம் தேதியும் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பாதுகாவலனாக நிலைநிறுத்திய முதல்வர் மோகன் யாதவ்!

இரு கட்டங்களுக்கும் வேட்புமனு சரிபார்ப்பு நாளாக 28 மற்றும் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவை திரும்ப பெற அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1ஆம் தேதி வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

 

 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இந்த 2 மாநிலங்களும் முறையே மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. மகாராஷ்டிரா மாநில அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைகிறது. ஆதலால், இந்த மாநிலத்தில் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநில அரசின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த மாநிலத்தில் 13 மற்றும் 20ஆம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

இடஒதுக்கீடு என்பது உரிமையே தவிர, விதிமுறைகளைத் தளர்த்தும் கருவியல்ல..! நீதிமன்றம் அதிரடி..
LPG விலைக்கு வேட்டு வைத்த Cow Dung Revolution! இனி சாணம் இருந்தால் போதும்.. சமையல் இலவசம்?