மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவழியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை - தொடரும் போராட்டம்

Published : Apr 29, 2023, 08:02 AM IST
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவழியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை - தொடரும் போராட்டம்

சுருக்கம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக்உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரிமாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில்6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்திதனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர்.

இந்த நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக டெல்லி காவல்துறை 2 எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 

முதலாவது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட மைனர் பாதிக்கப்பட்ட ஒருவரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளுடன் அடக்கம் போன்றவற்றை மீறுவது தொடர்பானது ஆகும்.

இதையும் படிங்க..மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. முழு விபரம்.!!

இரண்டாவது எஃப்ஐஆர், நாகரீகத்தை மீறுவது தொடர்பான தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மற்ற வயது வந்தோர் புகார் அளித்த புகார்கள் மீது விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்[உ தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டி ஏழு பெண் மல்யுத்த வீரர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

இந்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக, உச்ச நீதிமன்றம் டெல்லி அரசு மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்பியது, இது கடுமையான குற்றச்சாட்டுகள் என்று கூறியது. வெள்ளிக்கிழமை, டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த விவகாரத்தில் எப்ஐஆர் இன்று பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். "எப்ஐஆர் பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். அது இன்று பதிவு செய்யப்படும்" என்று துஷார் மேத்தா உச்ச நீதிமன்ற பெஞ்சில் தெரிவித்தார்.

இதையும் படிங்க..ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத்..எப்புட்றா.! எலான் மஸ்க்கை ஓடவிட்ட நெட்டிசன்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ