ஊரடங்கு நீட்டிப்பு... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. முழு விவரம் உள்ளே..!

Published : Apr 15, 2020, 10:45 AM ISTUpdated : Apr 15, 2020, 10:50 AM IST
ஊரடங்கு நீட்டிப்பு... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. முழு விவரம் உள்ளே..!

சுருக்கம்

ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றப்பட வேண்டிய திருத்தப்பட்ட நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏப்ரல் 20ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  

ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றப்பட வேண்டிய திருத்தப்பட்ட நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏப்ரல் 20ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வழிகாட்டு நெறிமுறைகளின் முழு விவரம்..

* அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலங்கள் மட்டும் இயக்க அனுமதி.

* மே 3 வரை விமானம், ரயி்ல், சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து.

* மக்கள் கூடும் அனைத்து இடங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்க மே 3 வரை தடை

* விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி

* ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க்  அணிவது கட்டாயம்

* பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி

* சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*  மீன், இறைச்சி கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன் பிடித்தல், மீன் சார்ந்த பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல அனுமதி.

* வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள், ஏ.டி.எம். திறந்திருக்கும்.

* உணவு, மருத்துகள் உள்ளிட்டவற்றை இணை வர்த்தக நிறுவனங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்

* பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு

* அனைத்து கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மே 3ம் தேதி வரை மூடப்டும்..

* திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டு தலங்கள் பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும்

* மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிக்கும்.

* இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதி இல்லை

* அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி. சரக்குகளை ஏற்றிச் செல்லவும், நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லவும், விமானம், ரயில்கள் இயக்கப்படும்.


* விவசாயத்துக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகள், உதிரிபாக விற்பனை கடைகள் திறந்திருக்கும். 

* கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம் 

* கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளை திறக்க அனுமதி

* அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்

* கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது

* மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!