வெப்பநிலை அதிகரிப்பால் அழியப்போகும் கொரோனா... இந்தியாவில் சூர்ய பகவானால் ஏற்படப்போகும் சூப்பர் சான்ஸ்..!

By Thiraviaraj RMFirst Published Apr 29, 2020, 4:44 PM IST
Highlights

கோடை வரும்போது இந்த நோய் அப்படியே காணாமல் போய்விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

வெப்பநிலை அதிகரிக்கும்போது கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் காணாமல் போய்விடும் என்று மக்களில் சிலர் நம்புகின்றனர். குளிரான மற்றும் வெப்பநிலை உள்ள பகுதிகளில் பெரிய அளவில் நோய்த் தொற்று பரவியுள்ளது. இதனால், கோடை வரும்போது இந்த நோய் அப்படியே காணாமல் போய்விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை உறுதி படுத்தும் விதமாக வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கொரோனா பரவல் குறைவு ஆகியவற்றுக்கு இடையே 85 சதவீதம் வரை மிகவும் வலுவான தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், நாடுமுழுவதும் சராசரி  வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு கொரோனா  பரவல் குறைவு ஆகியவற்றுக்கு இடையே 85 சதவீதம்  வரை மிகவும் வலுவான தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. 

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு தொகுதி ஆய்வகமான நீரி, ஒரு கணித மாதிரி ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.
உலக சுகாதார அமைப்பின் கொரோனா பாதிப்பு புள்ளி விவரத்தையும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் வெப்பநிலை புள்ளிவிவரத்தையும் வைத்து இந்த ஆய்வை நடத்தி உள்ளது.

சராசரி நிகழ்நேர வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் மற்றும் மராட்டியம் மற்றும் கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் ஆகியற்றிற்கு இடையிலான தொடர்பை பற்றி ஆய்வு செய்தது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் சராசரி வெப்பநிலை 25டிகிரி சி மற்றும் அதற்கு மேல் அதிகரித்த போது கொரோனா பாதிப்புள் குறைப்பை ஏற்படுத்தியது என்று நீரி ஆராய்ச்சி கூறி உள்ளது.

இருப்பினும், இந்தியாவில் வெப்பமான காலநிலை கொரோனா பரவலைக் கொண்டிருப்பதில் நன்மை ஏற்படும் என்றாலும், ஊரடங்கு  சமூக தொலைதூர நடவடிக்கைகள் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளின் நன்மைகளை விட அதிகமாக உள்ளன. நீரி, மூலோபாய நகர்ப்புற மேலாண்மை மையத்தின்  விஞ்ஞானி ஹேமந்த் பெர்வானி, கூறும் போது வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை கொரோனா பரவலில் அவை ஏற்படுத்தும் பாதிப்பு ஆகியவற்றில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்த விரும்பவில்லை.

ஆராய்ச்சியில் சமூக தூரத்தையும் சேர்த்துள்ளோம். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. எனவே, சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால், அதிக வெப்பநிலை போன்ற அம்சங்களின் நன்மைகள் ஏற்படாமல் போக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

click me!