முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை தவறான நிலையில் சித்தரித்து விட்டதாக பிரபல நடிகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் பிரபலமான இயக்குநராக இருந்தாலும், புதுமுக இயக்குநராக இருந்தாலும், தான் சொல்ல வருவதை, எவ்வித சமரசமும் இன்றி முழுமையாக சொல்லி, அதை திரைப்படமாக எடுத்தால், அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகுவது வாடிக்கையாகிவிட்டது. எதுவுமே இல்லாவிட்டாலும், சிலர் விளம்பரத்துக்காகவும், தயாரிப்பாளர்களிடம் பணம் பறிப்பதற்காகவும் பிரச்சனையை கிளப்புகின்றனர். திரைப்படத்தை வெளியிட போடப்படும் இவ்வித தடைகற்கள் எதுவும் வெப்சீரிஸ்களுக்கு இல்லை.
சைஃப் அலிகான், நவாசுதீன் சித்திக், ராதிகே ஆப்தே ஆகியோர் நடித்து ஒவ்வொரு வாரமும் வெளியாகும் இந்த தொடரில், ஒரு நேர்மையான காவல் அதிகாரிக்கும், நிழல் உலக தாதாவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதையாக்கப்பட்டுள்ளது. ஆடைகளுக்கு பஞ்சம் வைத்து, நிர்வாண காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸில், ஆளும் அரசுகள், அரசாங்கத்தின் தவறான முடிவுகள், அதனால் ஏற்படும் சறுக்கல்கள் என இன்றைய அரசியல் சூழலும், குற்றங்களும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.
சீக்ரெட் கேம்ஸ் தொடரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்த ஆபாச வார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும், ராஜீவ் காந்தியை பெண்ணுறுப்பு ஒன்ற கூறி வசை பாடுவது போன்றும் காட்சிகள் இருப்பதாக கூறியுள்ள அவர், இந்திய திரைத்துறையின் அனைத்து வரம்புகளும் மீறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து, கொல்கத்தா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.