அமர்நாத் தாக்குதலில் 7 பேர் பலி… 3 முக்கிய குற்றவாளிகள் கைது...

Asianet News Tamil  
Published : Aug 06, 2017, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
அமர்நாத் தாக்குதலில் 7 பேர் பலி…  3 முக்கிய குற்றவாளிகள் கைது...

சுருக்கம்

amarnath attack 7 people death... three acutest arrest

அமர்நாத் தாக்குதலில் தொடர்புடைய 3 முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ஜம்மு – காஷ்மீர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தரிசித்து வருகின்றனர். ஜூன் 29-ம் தேதி தொடங் கிய  இந்த அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 10-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டம் அருகே பஸ்ஸில் பயணித்துக் கொண்டு இருந்த அமர்நாத் யாத்திரிகர்கள் மீது ஆயுதங்கள் தாங்கிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பக்தர்கள்  பலியாயினர்.  30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில ஐ.ஜி.பி. முனீர் அகமது, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த 4 லஷ்கர் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்திருப்பதாகக் கூறினார்.

அவர்களுக்கு தளவாடங்கள், வழிகாட்டுதல் உள்ளிட்ட உதவிகளை வழங்கிய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முனீர் அகமது தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!