6 முறை உயர்வுக்குப் பின் பெட்ரோல் விலை முதல் முறையாக குறைப்பு

Asianet News Tamil  
Published : Nov 16, 2016, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
6 முறை உயர்வுக்குப் பின் பெட்ரோல் விலை முதல் முறையாக குறைப்பு

சுருக்கம்

புதுடெல்லி, நவ. 16-

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.46 காசுகளும், டீசல் ரூ.1.53 காசுகளும் குறைத்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து,  பெட்ரோல் விலை 6 முறை உயர்த்தப்பட்ட நிலையில், முதல் முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, டீசல் விலை தொடர்ந்து 3 முறை  உயர்த்தப்பட்ட நிலையில், முதல் முறையாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடைசியாக கடந்த 1-ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 0.89 காசுகளும், டீசல் 0.86 காசுகளும் உயர்த்தப்பட்டு இருந்தன. ஒட்டுமொத்தமாக கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் ரூ.7.53 காசுகள் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1.46 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் கடந்த 3 முறையில் ரூ.3.90 காசுகள் உயர்த்தப்பட்டு தற்போது, ரூ.1.53 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

இனி டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.65.93 காசுகளுக்கும், டீசல் லிட்டர் ரூ.54.71 காசுகளுக்கும் விற்கப்படும்.

PREV
click me!

Recommended Stories

ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட Air India.. இலவச ரீ ஷெட்யூல், டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு முழு பணம் ரிட்டன்
பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் திடீர் விலகல்.. பாஜக அழுத்தமா? பரபரப்பு தகவல்!