தொடரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம் - "கொடூரமான் முறையில் சிதைக்கப்பட்ட இந்திய வீரர்...!!!"

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
தொடரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம் - "கொடூரமான் முறையில் சிதைக்கப்பட்ட இந்திய வீரர்...!!!"

சுருக்கம்

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடனான மோதலில் 3 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். அதில் ஒரு வீரரின் உடல் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நேற்று காலை காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் இருவரை இந்திய பாது‌காப்பு படை வீரர்கள் சுட்டுக்‌கொன்றனர். பந்திபோரா மாவட்டத்தின் ஹாஜின் என்ற இடத்தில்‌ நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் மச்சில் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும்- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இதில் 3 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு வீரரின் உடல் சிதைக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..! புதிய அரசால் ரத்தக் களறியாக மாறிய போராட்டம்..!
நாங்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டோமா?.. சபாநாயகர் புகாரால் கொந்தளித்த ஜோதிமணி.. பரபரப்பு விளக்கம்!