அசுர வேகத்தில் தாக்கும் கொரோனா.. 7000 நெருங்கும் உயிரிழப்பு.. இத்தாலியை அடித்து தூக்கிய இந்தியா..!

By vinoth kumarFirst Published Jun 7, 2020, 11:35 AM IST
Highlights

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் உயிரிழப்பின் எண்ணிக்கை  6,929 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் உயிரிழப்பின் எண்ணிக்கை  6,929 ஆகவும் உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628ஆக அதிகரித்துள்ளது. அதில், 1, 20,406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.1,19,293 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ,929ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்ராவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  மகாராஷ்ராவில்  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 82,968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,969 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 37,390 பேர் குணமடைந்துள்ளனர்.  30,152 பாதிப்புடன் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. உயிரிழப்பு 251 பேர் உயிரிழந்துள்து.  27,654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 3-வது இடத்தில் உள்ளது. அங்கு 761 பேர் உயிரிழந்துள்ளனர். 4வது குஜராத் உள்ளது. 

உலகளவில் ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், 2து இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் ரஷ்யா, 4வது இடத்தில் பிரிட்டன் நாடுகள் உள்ளன.

click me!