இந்த நிலையில், இம்ரான்கானுக்கு சிறையில் சிறந்த சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த பதினான்கு முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் சேப்பல் தயாரித்த இந்த கடிதம் இன்று மதியம் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பிடம் வழங்கப்பட்டது.
கபில் தேவ் முதல் ஆலன் பார்டர் வரை…
இந்த கடிதத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோருடன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன்கள் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், இயன் சேப்பல், பெலிண்டா கிளார்க், கிம் ஹியூஸ், இங்கிலாந்தின் மைக் ஆதர்டன், நாசர் ஹுசைன், மைக் பிரேர்லி, டேவிட் கோவர், மேற்கிந்தியத் தீவுகளின் கிளைவ் லாயிட் மற்றும் நியூசிலாந்தின் ஜான் ரைட் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.