அதிகரிக்கும் கிரெடிட் கார்டு ரிவார்டு மோசடி... சைபர் கிரிமினல்களிடம் சிக்காமல் இருப்பது எப்படி?

First Published May 9, 2024, 11:32 AM IST

கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகள் பெயரில் நடக்கும் மோசடிகளை அடையாளம் கண்டு, இழப்புகளைத் தவிர்க்க ஆக்ஸிஸ் வங்கி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

Credit card rewards scam

கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது செலவு செய்வதில் வசதியாக்குவதோடு, வங்கிகள் வழங்கும் சலுகைகள் மற்றும் ரிவார்டு புள்ளிகளையும் வழங்குகிறது. ரிவார்டு புள்ளிகள் நிதி சார்ந்த பலன்களை அளிக்கும் அதே வேளையில், சில மோசடி பேர்வழிகளுக்கும் வசதியாக இருக்கிறது. இந்நிலையில், ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகள் பெயரில் நடக்கும் மோசடி குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் மோசடிக்காரர்களை அடையாளம் கண்டு, இழப்புகளைத் தவிர்க்கும் வழிமுறைகளை ஆக்சிஸ் வங்கி எடுத்துரைத்துள்ளது.

Credit card scam

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சார்பாகப் பேசுவது போலக் காட்டிக்கொண்டு போனில் அழைக்கும் மோசடி ஆசாமிகள் வாடிக்கையாளர்களை நம்ப வைத்து OTP முதலிய ரசிகயத் தகவல்களைப் பெறுகிறார்கள். அதன் மூலம் தங்கள் திருட்டு வேலை அரங்கேற்றுகிறார்கள்.

Credit card fruad

வங்கியில் இருந்து அனுப்பவது போன்ற மின்னஞ்சல்கள் அல்லது எஸ்எம்எஸ்களை அனுப்பி, மோசடியான இணைப்புகளை கிளிக் செய்ய வைப்பார்கள். வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்களைத் திருடி, பணத்தையும் அபேஸ் செய்கிறார்கள். எனவே ஜாக்கிரதையாக சந்தேகமான லிங்க் எதையும் கிளிக் செய்யவே கூடாது.

Credit Card scams

மோசடி செய்பவர்கள் இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் சர்ச் என்ஜின்களை பயன்படுத்திகூட வாடிக்கையாளர்களை ஏமாற்றி, முக்கியத் தவல்களை திருட்டுத்தனமாக சேகரிக்கிறார்கள். எனவே, அதிகாரபூர்வமற்ற இணையதளங்களில் நுழையாமல் இருப்பது நல்லது.

Credit card banking scam

வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலமும் சைபர் கிரிமினல்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவார்கள். இதனால் ஸ்மார்ட்போன்களில் நம்பகமான செயலிகளை மட்டுமே இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Cyber Crime

முன்பின் தெரியாதவர்கள் போன் செய்தால் அவர்களிடம் தனிப்பட்ட விவரங்கள், ஏடிஎம் கார்டு விவரங்கள், OTP / PIN / CVV ஆகியவற்றை ஒருபோதும் பகிர வேண்டாம். ரிவார்டு புள்ளிகளைப் பார்க்க வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷனை மட்டும் பயன்படுத்தவும். எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் மோசடியில் மாட்டிக்கொண்டுவிட்டால், கவலைப்பட வேண்டாம். உடனடியாக அந்த முறைகேடு குறித்து தேசிய சைபர் கிரைம் போர்டலுக்கு புகார் கொடுக்கலாம். அதற்காகவே கட்டணமில்லா அவசர உதவி எண் 1930 உள்ளது. https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் மூலமும் மோசடி குறித்து புகார் கொடுக்கலாம்.

click me!