கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வினாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வரம்தரும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில். இக்கோவிலில் அண்மையில் நடைபெற்ற இரவு நேர திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இந்த விழாவின் போது, கருப்பசாமி வேடமணிந்து அருள்வந்து ஆடிய பூசாரி, கூர்மையான வாளின் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது, அங்கு திரண்டிருந்த மக்களுக்குத் தன் கைகளாலேயே நாணயங்களை அள்ளிப் பிரசாதமாக வழங்கினார்.