வானில் அரேங்கேறும் கிரங்களின் அபூர்வ நடனம்... சந்திரனுடன் இணையும் 2 கிரகங்கள்... இன்று மாலை காண தவறாதீர்கள்

First Published Jan 23, 2023, 1:49 PM IST

ஜோதிட சாஸ்திரப்படி, ஜனவரி 23ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சுக்கிரன், சனி, சந்திரன் இணைவு இருக்கும். இந்த அரிய அற்புதக் காட்சியை வானில் வெறும் கண்களால் கண்டு ரசிக்க முடியும். 

ஜோதிடமும், வானவியலும் ஒன்றுடன் பிணைந்து காணப்படுகின்றன. இந்த இரண்டு வேதங்களிலும் கிரகங்கள் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. சாஸ்திரப்படி,  ஜனவரி 17ஆம் தேதி சனி கிரகம் மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைந்தது. தொடர்ந்து ஜனவரி 22ஆம் தேதி சுக்கிரனும் இந்த ராசியில் நுழைந்தார். இன்று (ஜன.23) சந்திரனும் கும்பத்தில் நுழைகிறார். இப்படியாக கும்பத்தில் திரிகிரஹ யோகம் உருவாகி வருகிறது. இந்த மூன்று கிரக சந்திப்பு நிலையை  இன்று மாலை வானில் காணலாம். தொலைநோக்கி ஏதுமின்றி வெறும் கண்களால் வானில் காண முடியும். 

இந்த அரிய காட்சி எப்படி இருக்கும்? 

ஸ்ரீ கல்லாஜி வேத பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறைத் தலைவர் டாக்டர் மிருத்யுஞ்சய் திவாரி கூறுகையில்,"ஜனவரி 23ஆம் தேதி அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, சந்திரன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மேற்கில் ஒன்றாகத் தோன்றும். இதனை ஜோதிட மொழியில் திரிகிரஹ யுதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சந்திரன், வெள்ளி, சனி ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருக்கும்"என்றார்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, மேற்கில் ஒரு பிறை வடிவ நிலவு தெரியும்.  சந்திரனுக்குக் கீழே, சுக்கிரன் தெற்கே ஒரு உச்சியைப் போல் பிரகாசிப்பதாகத் தெரியும். அதே நேரம் சுக்கிரன் கிரகத்திற்கு கீழேயும் சனி கிரகத்தை பார்க்க முடியும். 

இன்று மாலை சுமார் 6.30 மணிக்குப் பின் வானத்தில் சுக்கிரன், சனி, சந்திரன் சேர்க்கையைப் பார்ப்பது நல்லது. இது 8 மணி வரை தெரியும். அதன் பிறகு சந்திரன் மறையும். கிட்டத்தட்ட  1.30 மணி நேரம் மட்டுமே இந்த அற்புத காட்சியை காண முடியும்.   நம் வீட்டு மாடியில் கூட சாதாரணமாக அதை காணலாம். 

இதையும் படிங்க: ஆண்களே ஜாக்கிரதை! இந்த ராசி பெண்கள் திருமணத்திற்கு பிறகும் காதல் செய்வார்களாம்... உங்க துணை என்ன ராசி?

click me!