இந்த மகாளய பட்சத்தில் முன்னோர்கள் பூலோகத்தில் இருந்து பூமிக்கு வருவதால் அவர்களை மகிழ்விப்பதற்காக திதி, தர்ப்பணம் கொடுப்பது மிகவும் அவசியம். எனவே, உங்களது முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை காகங்கள், பசுக்கள், நாய்களுக்கு அவர்களது நினைவாகக் கொடுக்கலாம். அதுமட்டுமின்றி, ஏழைகளுக்கு மாற்று திறனாளிகளுக்கு உணவு, உடை வழங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது முன்னோர்கள மகிழ்ந்து, உங்களையும், உங்களது சன்னிதியையும் ஆசீர்வதிப்பார்.
ஒருவேளை உங்களால் 14 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால், கண்டிப்பாக ஒருநாளாவது தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.