நாம் தெருக்களில் செல்கையில் பலரது வீட்டு வாசல்களிலும் இரண்டு புறங்களிலும் எலுமிச்சைப் பலத்தை பாதியாக வெட்டி குங்குமம் வைத்து வைத்திருப்பதை பார்த்திருப்போம். இது கண் திருஷ்டியை போக்கும் சக்தியை கொண்டது என்று பலரும் நம்பிக்கையுடன் செய்து வருகின்றனர்.
கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றலை நம் வீட்டில் நெருங்க விடாமல் ஓட ஓட விரட்ட நம் முன்னோர்கள் செய்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
முன்பு இந்த எலுமிச்சை பழத்தை கிராமப்புறங்களில் தான் அதிகமாக பார்த்து இருப்போம். ஆனால் இன்று நகர்புறங்களில் கூட வீட்டு நிலை வாசல் கதவு க்கு அருகே எலுமிச்சை பழத்தை வெட்டி வைக்கிறார்கள். இப்படி வைக்கப்படும் எலுமிச்சை பழத்தினால் பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது.
அம்மன், ஹனுமன்,கருப்ப சாமி, எல்லை தெய்வங்களுக்கு என்று ஆன்மீகத்திலும் எலுமிச்சைப் பழம் பயன்படுத்தப்பட்டு வருவதால், இதில் பல்வேறு தெய்வீக சக்திகள் இருக்கின்றன.