Pooja Flowers: சாமிக்கு போட்ட பூக்களை மரியாதையுடன் அப்புறப்படுத்துவது முக்கியம். சாமிக்கு படைத்த பூக்களை குப்பையிலோ, நீர்நிலைகளிலோ போட்டால் தோஷமாகுமா? அவற்றை எப்படி அப்புறப்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம்.
தினமும் சாமி கும்பிடும் பல வீடுகளில், ஃப்ரெஷ்ஷான பூக்களை வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால், பூஜை முடிந்ததும் அந்தப் பூக்களை என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் குழப்பம் வரும். சிலர் குப்பையில் போடுவார்கள், சிலர் ஆறு, குளத்தில் விடுவார்கள். ஆனால், இந்த இரண்டுமே எல்லா நேரத்திலும் சரியான முறை இல்லை.
மத நம்பிக்கைகளின்படி, சாமிக்கு படைத்த பூக்களை 'நிர்மால்யம்' (Nirmalya) அதாவது பூஜை பூக்கள் என்று சொல்வார்கள். இது சாதாரண குப்பை (Waste) கிடையாது, பூஜையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. அதனால், அவற்றை மரியாதையுடன் அப்புறப்படுத்துவது நல்லது என்று பல ஆன்மீக மரபுகள் கூறுகின்றன.
பூஜை செய்த பூக்களை சாதாரண குப்பையுடன் கலப்பது மத நம்பிக்கைகளின்படி சரியல்ல என்று பலர் நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி, பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளுடன் கலந்தால், இந்த பூக்களை ஆர்கானிக் உரமாக (Organic Compost) பயன்படுத்த முடியாது. எனவே, அவற்றை மற்ற குப்பைகளிலிருந்து தனியாக சேகரிப்பது நல்லது. பின்னர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வழியில் அப்புறப்படுத்தலாம்.
வீட்டுத் தோட்டம் (Home Garden) இருந்தால், பூஜை செய்த பூக்களை செடிகளின் அடியில் போடலாம் அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம். இதனால், அவை இயற்கையாக மட்கி, ஆர்கானிக் உரமாக (Compost) மாறி, மண்ணின் வளத்தை அதிகரிக்கும். சிலர் பூ இதழ்களை காய வைத்து வீட்டு அலங்காரம், இயற்கை சாயம் (Natural Color), வாசனைப் பொருட்கள் அல்லது ஊதுபத்தி தயாரிக்கவும் மறுபயன்பாடு (Reuse) செய்கிறார்கள்.
56
ஆறுகள், தண்ணீரில் போடக்கூடாது
பழைய காலத்தில் பூஜை பூக்களை ஆறுகள் மற்றும் குளங்களில் விடும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றைய சுற்றுச்சூழல் நிலையில், இதைத் தவிர்க்க வேண்டும் என பல நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பூக்களுடன் பிளாஸ்டிக், துணி, பாக்கெட் அல்லது பிற பூஜை பொருட்கள் தண்ணீரில் சேர்வதால், நீர் மாசுபாடு (Water Pollution) ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, உள்ளாட்சி நிர்வாகத்தின் விதிமுறைகளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மனதில் கொண்டு நிர்மால்யத்தை அப்புறப்படுத்துவது நல்லது.
66
பூஜை பூக்கள் ஆர்கானிக் உரமாக மாறும்
பூஜையில் பயன்படுத்திய பூக்களை மரியாதையுடன் கையாள்வது மத உணர்வு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பார்வையிலும் முக்கியமானது. குப்பைத் தொட்டியில் போடுவதை விட, செடிகளின் அடியில் போடுவது அல்லது ஆர்கானிக் உரமாகப் பயன்படுத்துவது ஒரு சிறந்த மாற்று. கவனத்திற்கு: இந்தத் தகவல் மத நம்பிக்கைகள், மரபுகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பழக்கவழக்கங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மதப் பாரம்பரியங்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் இருக்கலாம்.