விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலில் கடந்த 2019ம் ஆண்டு முதல் தங்கத்தேர் பழுதடைந்தது. இதனையடுத்த தேரினை புதுப்பிக்கும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து நேற்று மாலை இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் துறைசார்ந்த அலுவலர்கள், திருக்கோயில் அறங்காவலர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.