பின்னர், கோயிலின் நான்கு புறமும் பெரிய பெரிய மாடவீதிகள் அமைக்கப்பட்டு அங்கு அர்ச்சகர்களின் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. கோவிந்த பட்டினம் என்ற பெயரில் மாடங்களும், மக்கள் தொகையும் விரிவாக்கம் செய்யப்பட்டன.
அ்வ்வாறு உருவான கோவிந்த பட்டினம், தற்போதைய திருமலை அடிவாரத்தில் உள்ள கபில தீர்த்தம் வரை நீண்டு தற்போதைய திருப்பதி நகரம் உருவானதாக அங்கே கிடைக்கப்பெறும் பல்வேறு கல்வெட்டுகள் இந்த வரலாற்றை தெளிவுபடுத்துகிறது.