பண்டை காலமே திதிகள் 15 ஆகவும், அவை நந்தா, பத்ரா, ஜயா, ரிக்தா, பூர்ணா என ஐந்து வகை பிரிவுகளாகவும் வகுக்கப்பட்டுள்ளன. இதில் ஜயா பிரிவில் வரும் திரிதியும், திரயோதசியும் முகூர்த்த திதிகளாக பொதுவாக ஏற்கப்படுகின்றன. அப்படியிருக்க, அதே பிரிவில் உள்ள அஷ்டமி ஏன் மறுக்கப்பட வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது. முகூர்த்தப் பதவி நூலிலும் “அஷ்டமியும் சேர்த்துக்கொள்ள தவறில்லை” என குறிப்புண்டு. மேலும் கேரளத்தில் “இஷ்டா கிருஷ்ணாஷ்ட மீன்ந்தோ” என்ற செய்யுள் இவர்களிடம் பிரபலமானது. அதன் படி தேய்பிறை அஷ்டமியில் திருமணம் கூட நடத்தப்படுகிறது.
அஷ்டமி பற்றிய கருத்து சமூகம் முழுவதும் ஒரே மாதிரி இல்லை. சில முகூர்த்தப் பட்டியல்களில் அது இடம்பெறாததால், மக்கள் மனதில் அது நல்லதல்ல என்பது போல ஒரு எண்ணம் பரவிவிட்டது. ஆனால் அதே சமயம் ஜன்மாஷ்டமி, அசோகாஷ்டமி போன்ற விரதங்கள் அஷ்டமியின் சிறப்பை தானாகவே விளக்குகின்றன. கொல்கத்தாவின் காளி பூஜை, நவராத்திரி துர்கா லட்சுமி சரஸ்வதி பூஜை ஆகியவற்றில் அஷ்டமி முக்கிய நாள் என மதிக்கப்படுகிறது. அம்பாள் பூஜைக்கும் அஷ்டமி சிறப்பு என்பதும் வேத வாக்கே – (சதுர்தச்யாம் அஷ்டம்யாம் வா விசேஷத:).