மதுரை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் காங்கிரஸ் கூட்டங்களில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனால் திமுக தலைமைக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் பகிரங்கமாக ஆட்சியில் பங்கு இல்லை என மறுத்துள்ளார்.
திமுக தரப்பு கூட்டணி தொடரும், ஆனால் ஆட்சி பங்கு கோரிக்கை ஏற்க முடியாது என உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் தரப்போ சிலர் பொதுவெளியில் கருத்து கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேச்சுவார்த்தைக்கு முன் அமைதி காக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளது. காங்கிரஸ் மேலிட தலைவர்களான கே.சி.வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் போன்ற மத்திய தலைவர்கள் கூட்டணி உறுதி, தொடரும் என தெளிவுபடுத்தியுள்ளனர்.