மு.க.ஸ்டாலினுக்கு ஒரு தீவை வாங்கித் தரப்போகிறேன்... புயலைக் கிளப்பும் நித்யானந்தா..!

By Thiraviaraj RMFirst Published Dec 11, 2019, 12:53 PM IST
Highlights

தலைமறைவாக மறைந்து வாழும் சாமியார் நித்யானந்தா, 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்வராவார் எனத் தெரிவித்து தமிழக அரசியலிலும் நெருப்பை பற்ற வைத்துள்ளார். 
 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ல வீடியோவில், ‘’வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருவார். மீனாட்சி நினைத்தால் இது நடக்கும். அப்படி நடக்கும் நிலையில் , கைலாஷ் அருகில் அவருக்கு ஒரு தீவை அளிக்க உள்ளேன்.  சிவபெருமான் இதற்கு இசைவு தெரிவித்து, காலபைரவர் அதற்கு அனுமதி தருவதுடன் மீனாட்சியின் அருளும் தேவை.

2021-ஆம் ஆண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், மு.க. ஸ்டாலின் நிச்சயமாக முதலமைச்சராக வருவார் என நான் நம்புகிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார். ஆன்மீகம், கர்நாடக போலிசார் என பரபரப்பை ஏற்படுத்தி வந்த நித்தியானந்தா, தற்போது, தமிழக அரசியலிலும் பெரும்புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!