தனி ஆளாய் குமுறிய எச்.ராஜா..! மொத்தமாய் திரண்ட பாஜக தலைவர்கள்!
First Published Jan 1, 2020, 4:58 PM ISTமோடியையும், அமைத் ஷாவையும் சோலியை முடித்து விட வேண்டும் என நெல்லை கண்ணன் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் ஆவேசமடைந்த ஹெச்.ராஜா, நெல்லை கண்ணனை கைது செய்தே ஆகவேண்டும் என முதல் ஆளாக குமுறினார். மேலும் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார். இந்நிலையில், தற்போது, இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீசார் கலந்து செல்ல சொல்லுயும் தொடர்ந்து அவர்கள் கோஷமிட்டதால், போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...