சாம்பல் பூசி பிணத்துடன் கொடூரமாக உடலுறவு கொள்ளும் அகோரிகள்.. திகிலூட்டும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?

First Published Jan 26, 2023, 1:26 PM IST

அகோரிகள் பிணத்தை உண்பது மட்டுமில்லை, உடலுறவும் கொள்கிறார்கள். அகோரிகளின் மர்மமான உலகம் குறித்து இங்கு காணலாம். 

சாதாரண மக்கள் அகோரிகளையும், அவர்களின் வாழ்வியலையும் கண்டு கண்டு அஞ்சுகிறார்கள். சிலர் அவர்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். உண்மையில் அகோரிகளின் மர்ம உலகின் அறியப்படாத விஷயங்களை அறிந்தால் நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். 

பயமுறுத்தும் தோற்றம் கொண்ட அகோரிகள், ஆன்மீக உலகில் தங்கள் சொந்த வழியில் அலைகிறார்கள். கல்லறையில் வாழ்கிறார்கள். சிவனை வழிபடுகிறார்கள். அகோரிகள் கல்லறையில் என்ன செய்கிறார்கள்? அகோரிகளின் மர்ம உலகின் அம்சங்கள் எவ்வளவு சுவாரசியமானவை என்பது தெரியுமா? இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

சில வார்த்தைகளை கேட்கும் போது, நம்​ மனதில் ஒரு பிம்பம் வரும். அதை புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். அகோரிகளின் நிலையும் அப்படித்தான். அகோரி என்றால் சமஸ்கிருதத்தில் 'ஒளியை நோக்கி' என்று சொல்கிறார்கள். ஆனால் அகோரி என்றாலே கோரமான பயவுணர்வு தான் பலரை ஆக்கிரமிக்கிறது. 

தாந்த்ரீக சடங்கு 

அகோராவாக மாறுவதற்கான முதல் படி மனதிலிருந்து வெறுப்பை அகற்றுவதாகும். முதலில் அகோரிகள் கல்லறைகள் போன்ற இடங்களில் வாழ்ந்து தந்திர சடங்குகளை கற்கின்றனர். சமூகம் வெறுப்பதை அகோரிகள் ஆர தழுவுகிறார்கள். ஸ்வேதாஷ்வதரோபநிஷத்தில் சிவன் அகோரநாத் என்று அழைக்கப்படுகிறார். அகோரி பாபாவும் சிவனின் இந்த வடிவத்தை வணங்குகிறார். பாபா பைரவநாதரை அகோரிகள் வழிபடுகிறார்கள். அகோரிகளின் மாய உலகம் தனித்துவமானது. 

சிவபெருமான் தான் அகோர இனத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். சிவனின் அவதாரமான அவதூத பகவான் தத்தாத்ரேயர், அகோர சாஸ்திரத்தின் அதிபதியாகவும் உள்ளார். அகோரா பிரிவினர் சிவபெருமானை மனதில் கொண்டுள்ளார்கள். அவர்களின் கூற்றுப்படி, சிவன் தன்னில் முழுமையடைந்து எல்லா வடிவங்களிலும் வியாபித்து இருக்கிறார். 

அகோரிகள் சமைக்காமல் பச்சை இறைச்சியை அப்படியே சாப்பிடுகிறார்கள். அகோரிகள் கல்லறைகளில் வாழ்கிறார்கள். மயானத்தில் பாதி எரிந்த கிடக்கும் இறந்த சடலங்களின் சதைகளை சாப்பிடுகிறார்கள் என்ற உண்மையை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த விஷயம் சாதாரண மக்களுக்கு பயமாகத் தோன்றினாலும், அவ்வாறு செய்வது அகோரிகளின் மந்திர நடவடிக்கையின் சக்தியை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: மசாலா பொடி சீக்கிரமே வண்டு புடிச்சு கெட்டு போகுதா..? ரொம்ப நாள் பயன்படுத்த இதை மட்டும் பண்ணுங்க..

அகோரிகள் சிவனை மட்டுமின்றி இறந்த உடலையும் வணங்குபவர்கள். சிவனின் ஐந்து வடிவங்களில் அகோரமும் ஒன்று. அகோரிகள் இறந்த உடல் அருகே அமர்ந்து சாதனாவையும் செய்கிறார்கள். ஏனெனில் இந்த இறந்த உடல்கள் சிவபிராப்திக்கான பாதை என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் தியானத்தில் சிவனுக்கு பிணத்தின் சதைத் துண்டங்களையும், மதுவையும் வழங்குகிறார்கள். ஒற்றைக் காலில் நின்று, சிவனை வழிபட்டு, மயானத்தில் அமர்ந்து யாகம் செய்வார்கள். 

இறந்த உடலுடன் உடலுறவு கொள்வார்கள் 

அகோரிகள் இறந்த உடலுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்கிறார்கள். அப்படி செய்வதை சிவனையும் சக்தியையும் வழிபடும் முறையாகக் கருதுகின்றனர். இறந்த உடலுடன் உடலுறவின் போது, மனம் கடவுள் பக்தியில் ஈடுபட்டால், அதுவே உயர்ந்த சாதனை என்று நம்புகிறார்கள். 

அகோரிகளின் மர்ம உலகம்

அகோரிகள் இந்து மதத்தின் ஒரு பகுதியினர். அதனால்தான் அகோரி பந்த் அல்லது அகோர் பந்த் என்று அழைக்கப்படுகின்றனர். அகோரிகள் நாடு முழுவதும் உள்ளனர். அதிலும் அதிகபட்சமாக அகோரிகள் காசி மற்றும் வாரணாசியில் காணப்படுகின்றனர். ஓகாத், சர்பங்கி, குரே ஆகியவை அகோரியின் மூன்று கிளைகள். கினாராம் எனும் அகோரி, அகோரியின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார். இவர் கலூராவின் சீடர். கினாராம் பாபா அகோரி கீதாவலி, விவேகசரா, ராம கீதையை இயற்றினார். அவர் 1826இல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: தீராத நோய்களையும் தீர்க்கும் கடுகு வைத்தியம்!

அகோரிகள் பிரம்மச்சரியம் செய்வதில்லை! 

மற்ற ரிஷிகளும் துறவிகளும் பிரம்மச்சரியத்தைப் பின்பற்றும்போது, ​​அகோரிகள் பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுவதில்லை. இறந்த உடல்கள் மட்டுமல்ல, அகோரிகளும் உயிருடன் உள்ளவர்களுடனும் உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். உடலில் சாம்பலைப் பூசிக் கொள்கிறார்கள். அது மட்டுமின்றி, ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் போது, ​​அவளுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். இந்த நடவடிக்கை அவர்களுக்கு சாதனையின் ஒரு பகுதியாக தோன்றுகிறது. இதுவே அகோரிகளின் வலிமையை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. 

மண்டை ஓடும், அகோரிகளும்

அகோரிகள் எப்போதும் 'கபாலிகா' என்று அழைக்கப்படும் மண்டை ஓட்டை அவர்களுடன் வைத்திருப்பார்கள். சிவனைப் பின்பற்றும் அகோரிகள் மண்டை ஓட்டை உணவுப் பாத்திரமாகப் பயன்படுத்துகின்றனர். 

click me!