'மர மனிதர்' ராமையா
பத்மஸ்ரீ விருது பெற்ற 'மர மனிதர்' ராமையா சனிக்கிழமை காலமானார். தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் ரெட்டிபள்ளி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 87.
கம்மம் மாவட்டத்தில் பசுமைப் போராளி, "சேட்டு (மரம்) ராமையா" அல்லது "வனஜீவி ராமையா" என்று பிரபலமாக அறியப்பட்ட தரிப்பள்ளி ராமையா, பல ஆண்டுகளாக மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டு வந்தவர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதற்காக, 2017ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.