தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் அரசு வேலையில் சேருவதற்கு இந்தியராக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். இந்தியர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சரிபார்ப்பதும் காவல்துறையின் வேலையாக உள்ளது. அதேபோல் கல்வி ஆவணங்கள், இதர ஆவணங்கள் பள்ளி கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகள் சரிபார்க்க வேண்டும். இந்த சரிபார்ப்பு முறையாக நடைபெறாததால் பலர் போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலையில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.