தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் டெல்லியில் உள்ள இல்லத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், பராசக்தி படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.