9ம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள் + லேப்டாப்! எந்த மாநிலம் தெரியுமா?

Published : Mar 24, 2026, 04:05 PM IST

9ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அது எங்கு, அதற்கான தகுதி என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
13
இலவச சைக்கிள் திட்டம்

கல்வி, சுற்றுச்சூழல், கட்டமைப்பு என பல துறைகளில் பெரிய அறிவிப்புகள் வெளியாகும் என முன்கூட்டியே தகவல்கள் பரவியிருந்தன. குறிப்பாக, மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்து பரபரப்பு நிலவியது. அரசு வெளியிட உள்ள பட்ஜெட்டில், கல்வித் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட தகவல்கள் வந்தன.

9ஆம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள், 10ஆம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் இதில் இடம் பெற்றதாகக் கூறப்பட்டது. மேலும், வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கும் திட்டமும் இதில் சேர்க்கப்பட்டது. இதனால், இந்த அறிவிப்புகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்ற ஆர்வம் அதிகரித்தது.

23
இலவச லேப்டாப் திட்டம்

இந்த பரபரப்புக்கு முடிவாக, இது டெல்லி மாநில அரசின் பட்ஜெட் என உறுதி செய்யப்பட்டது. ரூ.1,03,700 கோடி மதிப்பிலான இந்த செலவுத் திட்டத்தை ரேகா குப்தா சட்டசபையில் வெளியிட்டார். கல்வி மட்டுமின்றி, மாநகராட்சி மற்றும் நீர்வழங்கல் துறைகளுக்கும் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி மாநகராட்சிக்கு ரூ.11,666 கோடியும், டெல்லி ஜல் போர்டுக்கு ரூ.9,000 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. நகர கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சாலைகள், மின்கம்பிகள் மற்றும் முக்கிய திட்டங்களுக்கு தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூசி இல்லாத சாலைகள் மற்றும் மின்கம்பிகளை நிலத்தடியில் மாற்றும் பணிகள் முக்கியமாக கவனிக்கப்பட்டுள்ளன.

33
மாணவர்களின் கல்வி முன்னேற்றம்

இந்த பட்ஜெட், வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைக்கும் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி முன்னேற்றம் முதல் நகரத்தின் கட்டமைப்பு மேம்பாடு வரை பல துறைகளை உள்ளடக்கிய இந்த திட்டம், டெல்லியின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய திசை காட்டுகிறது என மதிப்பிடப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories