அதிகாலையில் நெஞ்சை பதறவைக்கும் கோர விபத்து! 5 இளைஞர்கள் பலி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

Published : Dec 07, 2024, 02:59 PM IST

ஐதராபாத்தில் இருந்து பூதன் போச்சம்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்த 6 இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். கார் ஏரியில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

PREV
14
 அதிகாலையில் நெஞ்சை பதறவைக்கும் கோர விபத்து! 5 இளைஞர்கள் பலி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
Telangana news

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இன்று அதிகாலை ஜலால்பூரில் இருந்து பூதன் போச்சம்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கார்  புவனகிரி அருகே அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் யாதகிரிகுட்டா என்ற ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

24
Telangana Car Accident

இந்த விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் காரின் கண்ணாடியை உடைத்து படுகாயங்களுடன் வெளியே வந்து  அலறியபடி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

34
Car Plunged into Lake

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

44
Police investigation

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் வம்சி (23), திக்னேஷ் (21), ஹர்ஷா (21), பாலு (19), வினய் (21) என்பது தெரியவந்தது. மேலும் போதையில் இருந்ததாகவும், அதிகவேகத்தில் கார் இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. கார் விபத்தில் சிக்கி 5 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories