பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு சிறுவன் ராகுல் காந்தியிடம் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டான். அதற்கு ராகுல் காந்தி, தனது வேலை முடிந்ததும் திருமணம் செய்துகொள்வதாக பதிலளித்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறுவனுடன் உரையாடிய தருணம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்பும் கேள்வியை அந்தச் சிறுவன் நேரடியாகக் கேட்டிருக்கிறான்.
"நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?" என்று கேட்ட அந்தச் சிறுவன் கேட்பதும் ராகுல் காந்தி பதில் அளிப்பதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஆனால், வீடியோவில் ஒலி இல்லாததால், அவர்கள் பேசியதைக் கேட்க முடியவில்லை ஆனால், ராகுல் காந்தி தன்னிடம் சொன்ன பதிலை அந்தச் சிறுவன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தான்.
23
வேலை முடிந்ததும் திருமணம்
"நான் ராகுல் காந்தியிடம் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், 'தனது வேலை முடிந்ததும் திருமணம் செய்துகொள்வதாக' பதிலளித்தார்," என்று அந்தச் சிறுவன் கூறினான்.
ராகுல் காந்தியின் திருமணம் குறித்த கேள்விகள் சமீபகாலமாகத் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
33
தீபாவளி கொண்டாட்டத்தின்போது
கடைசியாகத் தீபாவளி கொண்டாட்டத்தின்போது பழைய டெல்லியில் உள்ள கண்டேவாலா இனிப்புக் கடையில் பாரம்பரிய இனிப்புகளைச் செய்துகொண்டிருந்தபோது, கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் விளையாட்டுத்தனமாக ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்றும், திருமண இனிப்பு ஆர்டர் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்ட தரவுகளின்படி, மாலை 5 மணி நிலவரப்படி பீகாரில் முதல் கட்டமாக 60.13% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.