எஸ்.எஸ்.எல்.சி தோல்வி/ எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி, எச்.எஸ்.சி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி விண்ணப்பம் பெறலாம்.