இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, சில தகுதிகள் அவசியம்.
• பெற்றோர் இருவரும் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள்.
• பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள்.
• பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக அல்லது சிறையில் உள்ளவராக இருக்கும் குழந்தைகள்.
இத்தகைய சூழலில் ஆதரவு தேவைப்படும், 18 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் உதவி பெறத் தகுதியுடையவர்கள்.