இளநிலை உதவியாளர் மற்றும் பெரிய சன்னதி சார்ந்த வாத்தியப் பணிகளுக்கு மாதச் சம்பளமாக ₹18,500 முதல் ₹58,600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூர்க்கா, திருவலகு, கால்நடை பராமரிப்பாளர் போன்ற பணிகளுக்கு ₹15,900 முதல் ₹50,400 வரையும், உதவி யானைப்பாகன், சலவையாளர் ஆகியோருக்கு ₹11,600 முதல் ₹36,800 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.