சென்னை ஐ.டி.ஐ-யில் ரோபோடிக்ஸ் மற்றும் ட்ரோன் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. யார் விண்ணப்பிக்கலாம், கடைசி தேதி என்ன போன்ற முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) ரோபோடிக்ஸ், ட்ரோன் விமானி போன்ற எதிர்காலத் தொழிற் பிரிவுகளில் சேர மாணவர்கள் ஜூன் 13, 2025 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
26
புதிய தொழில் பிரிவுகள் மற்றும் படிப்புகள்!
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு, பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் வடசென்னை ஐடிஐயில் 2025-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கட்டிடப் பொறியியல் உதவியாளர், கட்டிடப் பட வரைவாளர், இயந்திரப் பட வரைவாளர், லிஃப்ட் மெக்கானிக், எலெக்ட்ரீசியன், ஏசி - ஃப்ரிட்ஜ் டெக்னீசியன், வயர்மேன் ஆகிய 2 ஆண்டு தொழில் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
36
ஓராண்டு படிப்பு
அதேபோல, ஓராண்டு படிப்புகளான பிளம்பர், வெல்டர், இன்டீரியர் டிசைன் மற்றும் டெக்கரேஷன், அத்துடன் 6 மாத காலத் தொழில் பிரிவான ட்ரோன் விமானி படிப்புக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், தொழில் துறை 4.0 திட்டத்தின்கீழ் ஓராண்டு தொழிற்பிரிவுகளான ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம், டிஜிட்டல் உற்பத்தி மற்றும் 2 ஆண்டு தொழிற்பிரிவுகளான எலெக்ட்ரிக் வாகன மெக்கானிக், வடிவமைப்பாளர், வர்ச்சுவல் வெரிஃபையர், அட்வான்ஸ் சிஎன்சி டெக்னீசியன் உள்ளிட்ட படிப்புகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தொழிற் பிரிவுகளில் சேர 8, 10-ம் வகுப்பு முதல் டிப்ளமோ, பட்டப் படிப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். ஆர்வமுள்ள மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 13, 2025 ஆம் தேதிக்குள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள ஐடிஐ வளாகத்தில் நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.
56
இலவசப் பயிற்சி மற்றும் உதவித்தொகை!
இந்த அனைத்துப் பயிற்சிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன; எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
66
கூடுதல் விவரங்கள்
கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், 9499055653 மற்றும் 8144622567 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது வடசென்னை மாணவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.