இதில், பொதுப்பிரிவினரில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 600-ம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 600, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 1000-ம் வழங்கப்படும். ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப்படிப்புகள் முடித்தவர்களுக்கு இந்த உதவித்தொகை பெற தகுதியில்லை. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.