அரசு பாலிடெக்னிக் சேர சூப்பர் சான்ஸ்! கால அவகாசம் நீட்டிப்பு - மிஸ் பண்ணாதீங்க!

Published : May 24, 2025, 10:18 PM IST

மாணவர்களுக்கு நல்ல செய்தி! அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

PREV
13
பொதுத்தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான மூன்றாண்டு கால பட்டயப் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வந்தனர்.

23
கால அவகாசம் நீட்டிப்பு: தொழில் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!

இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (மே 23, 2025) நிறைவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

33
கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்!

மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் விருப்பமான பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். புதிய கால அவகாசம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories